ஸ்ரீபெரும்புதுார், : ஸ்ரீபெரும்புதுார்- - வாலாஜாபாத் இடையே, அரசு பஸ் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் சுற்று வட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள், ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் கோவில், வல்லக் கோட்டையில் முருகன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன.மேற்கண்ட இடங்களுக்கு, வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில்இருந்து, பலர் வருகின்றனர்.இந்நிலையில், ஸ்ரீபெரும் புதுார்- - வாலாஜாபாத் இடையே, நேரடியாக அரசு பேருந்து வசதி இல்லை. இதனால், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் வாலாஜாபாத், சுற்று வட்டத்தில் வசிப்போர், ஒரகடம் பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து, மற்றொரு அரசு பேருந்தை பிடித்து செல்ல வேண்டியுள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு நேரமும், பணமும் அதிகம் செலவாகிறது. இது குறித்து பொது மக்கள் கூறுகையில், 'வாலாஜாபாத்- - ஸ்ரீபெரும்புதுார் இடையே, அரசு பஸ் இயக்கினால், 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்' என, தெரிவித்தனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE