உத்திரமேரூர் : தர்ப்பூசணி சீசன் துவங்கியதை தொடர்ந்து, உத்திரமேரூரில், கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
உத்திரமேரூர் வட்டாரத்தில், பில்லாஞ்சிமேடு, ஆதவப்பாக்கம், மருதம் உள்ளிட்ட கிராமங்களில், தர்ப்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. பிப்., இரண்டாம் வாரத்தில் துவங்கி, மே மாதம் வரை விற்பனை செய்யப்படும்.கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது, உத்திரமேரூர் வட்டாரத்தில், தொடர்ச்சியாக பெய்த மழையால், தர்ப்பூசணி சாகுபடி செய்யப் பட்டிருந்த நிலங்களில், மழை நீர் தேங்கியது. இதனால், விளைச்சல் பாதிக்கப்பட்டு, தர்ப்பூசணி வரத்து குறைந்துள்ளது.
இது குறித்து, உத்திரமேரூரைச் சேர்ந்ததர்ப்பூசணி வியாபாரி முருகேசன் கூறியதாவது:கடந்த ஆண்டு, தர்ப்பூசணி சீசன் துவங்கியபோது, கிலோ, 15 ரூபாய்க்கு விற்பனையானது.பின், கோடை காலம் துவங்கும்போதே, கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால்,விலை, மேலும் வீழ்ச்சியடைந்து, கிலோ, 8 முதல் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இருப்பினும், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.இந்நிலையில், பலத்த மழை காரணமாக, நடப்பாண்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். பிற மாவட்டங்களில் இருந்து, தர்ப்பூசணி வரத்து அதிகரித்தால், விலை குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE