வாலாஜாபாத் : இளையனார்வேலுார் பால சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், சேதமடைந்த நான்கு கால் மண்டப மேற்கூரை, சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
வாலாஜாபாத் அடுத்த, இளையனார்வேலுார் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில், கருங்கற்களால் ஆன, நான்கு கால் மண்டபம் உள்ளது.இதன் மேற்கூரை, திருவாச்சி என, அழைக்கப்படும் வளைவு, சில மாதங்களுக்கு முன் சேதமடைந்து விழுந்தது. கொரோனா ஊரடங்கில், பக்தர்கள்வருகை இல்லாததால்சீரமைக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், ந ன்கொடையாளர், ஒருவரின் உதவியுடன், சேதமடைந்த நான்கு கால் மண்டபம், சீரமைக்கும் பணி நடந்து வருகிறது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE