பல்லடம்;ஓவியம் வரைந்து சுற்றுச்சுவரை வண்ணமயமாக்கும் முயற்சியில், செஞ்சேரிபுத்துார் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.பல்லடம் அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரிபுத்துார் அரசு துவக்க பள்ளியில், 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். கொரோனா நோய் தொற்று அபாயம் கருதி, துவக்க, மற்றும் நடுநிலை பள்ளிகள் செயல்படாமல் உள்ளன.இச்சூழலில், மன அழுத்தம் நீங்க, பள்ளி சுவற்றில் ஓவியம் வரையும் பணியில், செஞ்சேரிபுத்துார் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து தலைமை ஆசிரியர் கணேசன் கூறியதாவது:கொரோனா பாதிப்பால், ஓராண்டாக பள்ளிகள் செயல்படாமல் உள்ளன. படிப்பு, விளையாட்டு என சுறுசுறுப்பாக இயங்கி வந்த மாணவர்கள் இதனால் மன அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதனை போக்குவதற்காக பள்ளியின் சுற்றுச்சுவரில் ஓவியங்கள் வரைய தீர்மானிக்கப்பட்டது.இதில், மாணவ, மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். சுற்றுச்சுவரை தாங்களாகவே சுத்தம் செய்து, ஓவியம் வரைந்து அசத்துகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE