மதுராந்தகம் : குடும்ப தகராறில், மனைவி மீது பெட்ரோல் ஊற்றி, தீயிட்டு கொலை செய்த கணவர், தீக்காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இறந்தார்.
மதுராந்தகம் அடுத்த, இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தீபன், 45; இரும்பு கடை வியாபாரி. இவரது மனைவி, ஜீவா 40. இவர்களுக்கு, பரத் 20, கிருபாவதி, 19, என, இரு பிள்ளைகள் உள்ளனர்.நேற்று முன்தினம், தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த பார்த்தீபன், வீட்டிலிருந்த பெட்ரோலை எடுத்து, மனைவி மீது ஊற்றி, தீ வைத்தார். இதில், எதிர்பாராத விதமாக பார்த்தீபன், அவரது மகள் கிருபாவதி மீதும் தீ பரவியது.மனைவி ஜீவா, அதே இடத்திலேயே உயிரிழந்தார்.
தந்தையும், மகளும் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை, சிகிச்சை பலனின்றி, பார்த்தீபன் இறந்தார். மகள் கிருபாவதி, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அச்சிறுப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE