கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய சாலையோரம் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக விளங்குகிறது. நகரின் முக்கிய சாலைகளான காந்தி ரோடு, சேலம் சாலை ஆகிய சாலைகளில் அரசு அலுவலங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் உள்ளதால் எப்பொழுதும் போக்குவரத்து மிகுதியாக உள்ளது.குறிப்பாக, கச்சேரி சாலையில் வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள், கோர்ட் உள்ளதால் அதிகளவு போக்குவரத்து உள்ளது.இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையை அடைத்தவாறு வாகனங்களை தாறுமாறாக நிறுத்திச் செல்கின்றனர்.
இதனால், இடநெருக்கடி ஏற்பட்டு கடும் போக்குவரத்து பாதிக்கிறது.இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. விதிகளை மீறி சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்தம் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE