கள்ளக்குறிச்சி : பம்புதோட்டம் - அணைக்கரைகோட்டாலம் தார்சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து கரடு முரடாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பம்புதோட்டம் - அணைக்கரைகோட்டாலம் சாலை வழியாக கிராம பொதுமக்கள் பலர் சென்று வருகின்றனர். இங்குள்ள சுற்றுப்புற கிராமங்களில் கரும்பு, மக்காசோளம், மரவள்ளி போன்ற அறுவடை செய்த விவசாய பொருட்களை ஏற்றி செல்லும் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்லவேண்டும். சாலையில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து கரடு முரடாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக காட்சியளிக்கிறது.
இதனால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையில் செல்லும் கிராம பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, பம்புதோட்டம் - அணைக்கரைக்கோட்டாலம் தார்சாலையை சீரமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE