கள்ளக்குறிச்சி : தண்டலை கிராமத்தில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில், மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை ஊராட்சியில் மாரியம்மன் கோவில் அருகே கடந்த 30 ஆண்களுக்கு முன் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. அதன் அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் ஏற்றி, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.இந்நிலையில், இக்கிராம மக்களின் தண்ணீர் தேவைக்கேற்ப கூடுதல் கொள்ளளவு கொண்ட பெரிய அளவிலான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் மிகவும் பழமை வாய்ந்த இந்த தொட்டி போதிய பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்டது.
இதனால் தொட்டி, ஆங்காங்கே சேதமடைந்து உடைந்து விழும் நிலைக்கு மாறியுள்ளது.எனவே உடைந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை, விபத்து ஏற்படும் முன் அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE