கள்ளக்குறிச்சி : தண்டலை ஊராட்சியில், சுகாதார வளாகம் பூட்டியே கிடப்பதால், அதை பயன்படுத்த முடியாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை ஊராட்சியில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த இந்த சுகாதார வளாகம், பல மாதங்களாக போதிய பராமரிப் பில்லாததால் தற்போது பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி பூட்டி வைக்கப் பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரி, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சுகாதார வளாகத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE