திருப்பூர்:குண்டடத்தில், ஏ.டி.எம்., மையத்துக்குள் கேட்பாரற்று கிடந்த பணத்தை வாலிபர் போலீசில் ஒப்படைத்தார்.திருப்பூரை அடுத்த குண்டடம், மேட்டுக்கடையை சேர்ந்தவர் சதீஷ்குமார், 28. இவர் நேற்று காலை கோவை ரோட்டில் உள்ள ஏ.டி.எம்., ஒன்றுக்கு பணம் எடுக்க சென்றார். அங்கு, கேட்பாரற்று கிடந்த, பத்தாயிரம் ரூபாயை எடுத்தார்.குண்டடம் போலீசாரிடம், பணத்தை வாலிபர் ஒப்படைத்தார். அவரின் நேர்மையை போலீசார் பாராட்டினர். பணம் யார் தவற விட்டனர் என்பது குறித்து குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE