திருப்பூர்:சம்பள உயர்வு பேச்சு வார்த்தையை விரைந்து முடிக்க வலியுறுத்தி, திருப்பூரில் அனைத்து பனியன் தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அனைத்து பனியன் தொழிற்சங்கத்தினர் சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று மாலை தர்ணா போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., பனியன் சங்க செயலாளர் சம்பத் தலைமை வகித்தார்.ஏ.ஐ.டி.யு.சி., பனியன் சங்க செயலாளர் சேகர், எல்.பி.எப்., தலைவர் பாலசுப்ரமணி, ஐ.என்.டி.யு.சி., செயலாளர் சிவசாமி, எம்.எல்.எப்., செயலாளர் மனோகரன், எச்.எம்.எஸ்., செயலாளர் முத்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், சம்பள உயர்வு பேச்சு வார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE