திருப்பூர்:திருப்பூரில், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அகில இந்திய லைப் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று நடந்தது. திருப்பூர் கிளை செயலாளர் சஞ்சய் ராஜா, கோவை கோட்ட தலைவர் துளசிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், எல்.ஐ.சி., பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும்; எல்.ஐ.சி.,யின் பங்குகளை விற்க கூடாது என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE