திருப்பூர்:குடும்ப பாதுகாப்புடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உட்பட கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள், 253 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நேற்று காலை நடந்தது. மாவட்ட தலைவர் பாக்கியம் தலைமை வகித்தார்.நிர்வாகிகள் ஆறுமுகம், கற்பகம், ராஜேஸ்வரி, ஜெயந்தி, தனலட்சுமி, செல்வி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் ஜெயமேரி வரவேற்றார். மாநில செயலாளர் சக்தி, மாவட்ட இணை செயலாளர் நாகராஜன் சிறப்புரை ஆற்றினர்.இதில், சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்; ஓய்வு பெறும் ஊழியருக்கு ஒட்டு மொத்த தொகை, அமைப்பாளர்களுக்கு, 5 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு, 3 லட்சமும் வழங்க வேண்டும் கோஷங்கள் எழுப்பினர்.தொடர்ந்து, பல்லடம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தெற்கு உதவி கமிஷனர் நவீன்குமார் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட, 253 பேரை கைது செய்து, வீரபாண்டியில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர்.கைதானவர்கள் நேற்று மாலை விடுவிக் கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE