திருப்பூர்:மாதாந்திர உதவி தொகை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் குடியிருப்பு போராட்டம் நடத்தினர்.மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி தொகையை, 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 5 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும், தனியார் வேலை வாய்ப்புகளில், 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மாற்றுத்திறனாளிகள் தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளது.இதனை நிறைவேற்ற வலியுறுத்தி, நேற்று மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று இப்போராட்டம் நடந்தது.அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே, திரண்ட சங்கத்தினர் குடியேறும் போராட்டம் அறிவித்து அமர்ந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் ஜெயபால் பொருளாளர் காளியப்பன் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பாளர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE