பல்லடம்:பல்லடம் அருகே, நொச்சிபாளையத்தில் உள்ள மின்கம்பம் ஒன்றின் அடித்தளம் மோசமாக உள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையம் பூத்தோட்டம் பகுதியில் உள்ள மின் கம்பம் ஒன்றின் அடிப்பகுதி மிகவும் சேதம் அடைந்துள்ளது. அதன் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், கம்பம் உடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "பூத்தோட்டம் பகுதியில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. கால்நடைகளும் அவ்வப்போது மேய்ச்சலுக்கு விடப்படுவது வழக்கம். இங்குள்ள மின் கம்பம் உடைந்து கீழே விழும் நிலையில் இருப்பதால், விபத்து அபாயம் உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். உடனே மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE