அவிநாசி:அவிநாசி அருகே துலுக்கமுத்துாரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், கூலி தொழிலாளி. அவரது மனைவி சோனியா, 20.கர்ப்பிணியான, அவர் துலுக்கமுத்துாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற சென்றார். அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், '108' ஆம்புலன்ஸ் மூலம், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸ் வாகனத்தை டிரைவர் கார்த்திக் ஓட்டினார்.பிரசவ வலியால் துடித்த சோனியாவை, டெக்னீஷியன் பூபேஷ் கவனித்து கொண்டார். பழங்கரை அருகே சோனியாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE