சேலம்:'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த, ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம், செண்பகமாதேவியை சேர்ந்தவர் அசோக்குமார், 36. ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்த இவர், கடந்த மே மாதம், சேலம், அம்மாபேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். அப்போது, நண்பருடன் சேர்ந்து, அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, பலாத்காரம் செய்தார்.
சிறுமியின் பெற்றோர் புகார்படி, அம்மாபேட்டை மகளிர் போலீசார், அசோக்குமாரை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில், போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததால், வழக்கு விசாரணை விரைவுபடுத்தப் பட்டது. அதேநேரம், அசோக்குமாருக்கு ஜாமின் கிடைக்கவில்லை.
இதனால், மனஉளைச்சலில் இருந்த அவர், நேற்று காலை, சிறையின் எட்டாவது பிளாக்கில் உள்ள, தன் அறை மின்விசிறியில், வேட்டியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறை வார்டன், அசோக்குமார் துாக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சிஅடைந்து, அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள், உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE