சேலம்:''புதுச்சேரியில் அமைச்சர் எம்.எல்.ஏ.க்களை மிரட்டி பா.ஜ. ஆட்சி கவிழ்ப்பு வேலை செய்தது அசிங்கமாக உள்ளது'' என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
சேலம் கன்னங்குறிச்சியில் திருமண விழாவில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் காங். ஆட்சியை கவிழ்க்க கிரண்பேடி மூலம் பல்வேறு முயற்சி மேற்கொள்ளப் பட்டு தொல்லைகள் கொடுக்கப்பட்டன. வெற்றிகரமாக ஐந்து ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளேன். இதை பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.வினர் அமைச்சர் எம்.எல்.ஏ.க்களை மிரட்டி ஆட்சி கவிழ்ப்பு வேலையை செய்துள்ளது அசிங்கமாக உள்ளது.
இதன் சதியில் அ.தி.மு.க.வும் உள்ளது வெட்கக்கேடு.மோடியை பார்த்து எனக்கு ஒருபோதும் அச்சமில்லை. அவரது தாத்தாவையும் சந்திப்பேன். என்னைப் பற்றி மோடிக்கு நன்றாக தெரியும். நான் ஊழல் செய்யாதவன். நாராயணசாமி ஊழல் செய்தார் என நிரூபிக்க முடியுமா?இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE