கோவை:ஈமு நிதி நிறுவன நடத்தி, ரூ.2.70 கோடி மோசடி வழக்கில், அரசு தரப்பு குற்றச்சாட்டு குறித்து யுவராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், 'சுதி ஈமு பார்ம்' என்ற நிறுவனம் நடத்தி, 156 பேரிடம், 2.70 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்த யுவராஜ், தமிழ்நேசன், வாசு ஆகியோர், 2012ல் கைது செய்யப்பட்டனர்.ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்டம், ஓமலுாரை சேர்ந்த, இன்ஜி., மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில், யுவராஜ் மீண்டும் கைது செய்யப்பட்டார். தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ஈமு மோசடி தொடர்பான வழக்கு, கோவை, 'டான்பிட்' கோர்ட்டில், விசாரணை நடந்து வருகிறது. நேற்று விசாரணைக்கு வந்த போது, மதுரை சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் யுவராஜை அழைத்து வந்து ஆஜர்படுத்தினர்.இவ்வழக்கில், அரசு தரப்பு சாட்சி விசாரணை முடிந்ததை தொடர்ந்து, அரசு தரப்பு சாட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து, யுவராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது.அப்போது, தனது தரப்பு சாட்சிகளை விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளிக்க வேண்டும் என்று, யுவராஜ் கேட்டுகொண்டார். அதை தொடர்ந்து விசாரணை மார்ச் 5க்கு ஒத்திவைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE