கோவை:கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், கிறிஸ்தவ மகளிர் சங்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சங்கம் சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அம்சவேணி முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ், மகளிர் குழுவினருக்கு அரசு வழங்கும் சுழல் நிதி, தொழிற்கடன், தொழில் தொடங்குவதற்கான பயிற்சி, அம்மா ஸ்கூட்டர் திட்டங்கள் பற்றி விளக்கினார்.விழாவில், கிறிஸ்தவ மகளிர் சங்கத்துக்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குவதாக, லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.லயன்ஸ் சங்க ஆளுநர் வின்சென்ட் தேவராஜ், கோவை மறை மாவட்ட கத்தோலிக்க சங்க தலைவர் அருள்தாஸ், லுாயிஸ் உள்ளிட்டோர் பேசினர். 271 பேருக்கு நல உதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE