கோவை:கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று மீண்ட ஐ.டி., ஊழியர், காய்ச்சலால் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கர்நாடகா, பெங்களூருவை சேர்ந்தவர் எழிலரசன், 30. இவர் அங்குள்ள ஐ.டி., நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் கோவை, சவுரிபாளையத்தை சேர்ந்த வினோதினி என்பவருக்கும், சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.எழிலரசனுக்கு சில மாதங்களுக்கு முன், கொரோனா தொற்று ஏற்பட்டது. பெங்களூருவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.தொடர்ந்து, அவரது உடல் மிகவும் சோர்வாக இருந்ததால், மனைவி கோவைக்கு அழைத்து வந்தார். பீளமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்தபோது, மர்ம காய்ச்சல் இருப்பது தெரிந்தது.அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் எழிலரசனின் உடல்நிலை மிகவும் மோசமானதால், வேறொரு தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE