கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அரசின் நிலையான கொரோனா நெறிமுறை வழிகாட்டுதல்களை பின்பற்றி நடந்த கூட்டத்தில் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்டார். தொடர்ந்து முதியோர் உதவித் தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், முதல்வரின் பசுமை வீடு திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான 260 மனுக்கள் பெறப்பட்டது.பெறப்பட்ட மனுக்கள் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ராஜாமணி, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் ரத்தினமாலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் அப்துல்பாரி, பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் பிரகாஷ்வேலு உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE