அன்னூர்:வடக்கலூர் ஊராட்சி செயலாளர் பதவிக்கு, பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதைக்கண்டு, பி.இ., எம்.இ., எம்.எஸ்.சி., படித்த பலரும் நேர்காணலில் பங்கேற்றனர்.அன்னூர் ஒன்றியத்தில் உள்ள வடக்கலூர் ஊராட்சி செயலாளர், பணியிடம் காலியாக உள்ளது. பணியிடத்தை நிரப்ப, இரு வாரங்களுக்கு முன், விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 136 பேர் விண்ணப்பித்திருந்தனர்.நேற்று அன்னூர் ஒன்றிய அலுவலகத்தில், நேர்காணல் நடந்தது. விண்ணப்பித்த, 136 பேரில், 80 பேர் நேர்காணலுக்கு வந்திருந்தனர்.இந்த பணியிடத்துக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் விண்ணப்பித்தவர்களில், 90 சதவீதம் பேர் பி.இ., எம்.இ., எம்.எஸ்.சி., என பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள்.நேர்காணலில் பங்கேற்ற சிலர் கூறுகையில், 'எங்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. எனினும் ஒவ்வொருவரிடமும் ஊராட்சி குறித்து, ஊராட்சி ஒன்றியம் குறித்து, கிராம சபா குறித்து, ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்டனர்.ஒரு கேள்விக்கு அளிக்கும் பதிலை வைத்து, எப்படி தகுதியானவர்களை தேர்வு செய்வார்கள் என தெரியவில்லை' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE