பெ.நா.பாளையம்:கோவை மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றாக விளங்குவது அனுவாவி சுப்ரமணியர் கோவில். இந்த கோவிலில் 2003ம் ஆண்டு, மூன்றாவது முறையாக கும்பாபிஷேகம் நடந்தது. 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பரிவார மூர்த்திகள், மூலவர், திருக்கோவில், மற்றும் அனைத்து கட்டுமானங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து கும்பாபிஷேக விழா, நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. யாக வேள்வி பூஜை நடந்தது. இன்று காலையில் கொடிமரம் ஸ்தாபித்தல், மாலையில் கோபுர கலசங்கள் நிறுவுதல் நடைபெறுகிறது.நாளை 25ம் தேதி காலை 8:00 மணிக்கு, அனைத்து பரிவார மூர்த்திகள், முருகப்பெருமான் விமான கோபுரத்திற்கும், 9:00 மணிக்கு, மூலவரான அனுவாவி, சுப்பிரமணியர் கோவில் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை தொடர்ந்து, அன்னதானம், முருகப்பெருமானின் திருக்கல்யாணம் நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE