கோவை:மனிதநேய ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆட்டோக்களை கயிறு கட்டி இழுத்து வந்தனர். காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, காலி காஸ் சிலிண்டரை பாடை கட்டி தூக்கி வந்து, மாலை அணிவித்தும், மலர் தூவி அஞ்சலி செலுத்தினர், ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அபூதாகிர் தலைமை தாங்கினார்.த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக் அலி, மாவட்ட செயலாளர் முஜிபுர் ரகுமான், -ம.ம.க., மாவட்ட செயலாளர் பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE