வாலாஜாபாத், : மணிகண்டீஸ்வரர் கோவிலில், தேரோட்டம் நேற்று, வெகு விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் கிராமத்தில், அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, கடந்த, 17ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. தினமும், பல வாகனங்களில், மணிகண்டீஸ்வரர் எழுந்தருளினார்.பிரம்மோற்சவத்தின், ஏழாவது நாளான நேற்று, 8:30 மணிக்கு. தேரில், அஞ்சனாட்சியுடன், மணிகண்டீஸ்வரர்எழுந்து அருளினார்.பக்தர்கள், 'ஓம் நமச்சிவாயா...' என, கோஷம் எழுப்பி, பக்தி பரவசத்துடன், தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர், நான்கு வீதிகளை வலம் வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE