உத்திரமேரூர் : தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், உத்திரமேரூர் வட்டக்குழு சார்பில், பல கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம், நேற்று நடந்தது.
இதில் பங்கேற்றவர்கள், கையில் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் முனுசாமி தலைமை வகித்தார்.இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை, 3,000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். தனியார் துறையில், மாற்றுத்திறனாளிக்கு, 5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கையில் திருவோடு ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதேபோல், திருப்போரூர் உட்பட, பல தாலுகாக்களில், இப்போராட்டம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE