ஊட்டி:ஊட்டியில் இருவேறு இடங்களில், காத்திருப்பு; மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 450 பேர் கைது செய்யப்பட்டனர்.ஊட்டி கலெக்டர் அலுவலக முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சசிகலா தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாள் காத்திருப்பு போராட்டம் நடந்தது.ஏ.டி.சி., பகுதியில், நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் விஜயா தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இரு வேறு இடங்களில், நடந்த போராட்டங்களில், 300 பெண்கள் உட்பட 450 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, மாவட்டத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE