சென்னை:ஊரக வளர்ச்சித் துறைக்கு, தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், 22 ஆயிரத்து, 218 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில், 126.89 லட்சம் வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டதில், இதுவரை, 21.93 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும், 2023க்குள், 104.96 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்
* ஊரக பகுதிகளில், 3,198 கி.மீ., தொலைவுக்கு, 880 சாலைகளை மேம்படுத்த, 2021 - 22ம் நிதி ஆண்டுக்கு, இடைக்கால பட்ஜெட்டில், 440 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
* பிரதமரின் ஊரக வீட்டுவசதி திட்டத்துக்கு, இடைக்கால பட்ஜெட்டில், 3,548 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறைக்காக, இடைக்கால பட்ஜெட்டில், 22 ஆயிரத்து, 218.58 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE