அன்னுார்:கோவை அருகே விபத்துக்கு உள்ளானவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, அந்த மருத்துவமனையின் ஏழாவது மாடியிலிருந்து குதித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார்.ஈரோடு மாவட்டம், பவானி, காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர், சேகரன் 50; சலவைத் தொழிலாளி. இவரது மனைவி நாகரத்தினம் 46. இவர்களுக்கு குழந்தை இல்லை.சேகரன் நேற்று காலை காலிங்கராயன் பாளையத்திலிருந்து, பண்ணாரிக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். காலை 8:00 மணி அளவில் சத்தி அருகே சிக்கரசம்பாளையத்தில், எதிரே வந்த கர்நாடகாவைச் சேர்ந்த கார், மோட்டார் பைக் மீது மோதியது. இதில், சேகரன் படுகாயமடைந்தார்.இவர் கோவை, குரும்பபாளையத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் இறந்தார். தகவல் அறிந்து, அந்த மருத்துவமனையின் ஏழாவது மாடியில் இருந்த, அவரது மனைவி நாகரத்தினம் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்து, அதே இடத்தில் இறந்தார். கணவன் இறந்த தகவல் அறிந்தவுடன், மனைவியும் மாடியில் இருந்து குதித்து இறந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.மோட்டார் பைக் விபத்து குறித்து, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் போலீசாரும், நாகரத்தினம் மாடியில் இருந்து கீழே குதித்து இறந்தது குறித்து கோவில்பாளையம் போலீசாரும் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE