சேலம்:தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன்,சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக உரிமைகளை, மத்திய அரசுக்கு மாநில அரசு, காவு கொடுத்து வருகிறது. வன்னியர்களுக்கு, 15 சதவீத உள் ஒதுக்கீடு கோரி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, 26க்கும் மேற்பட்ட வன்னியர் சங்கங்கள் போராடி வருகின்றன. ஆனால், பா.ம.க., தலைமையோ, நோட்டுக்கும், சீட்டுக்கும், தன் கொள்கையை, அ.தி.மு.க.,விடம் விற்பனை செய்துள்ளது.
தன் கல்வி நிறுவனங்கள், வன்னியர் நல வாரிய சொத்துக்களுடன் சேர்ந்து விடாமல் இருக்கவே, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில், ராமதாஸ் உள்ளார்.லோக்சபா தேர்தலுக்கு முன்னர் வரை, முதல்வரை, 'டயர் நக்கி' என, ராமதாஸ் விமர்சித்தார். அதை மறந்து விட்டு, அவருடன் முதல்வர் சேர்கிறார்.
தமிழகத்தில் நான்கு கட்சி தலைவர்கள், கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். எனவே, நெய்வேலி தொகுதியில் போட்டியிட, கடும் போட்டி நிலவுகிறது. தி.மு.க., அதை எனக்கு ஒதுக்கினால் போட்டியிடுவேன். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE