கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று 41 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கோவையில், நேற்று 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 55 ஆயிரத்து, 544 ஆக உயர்ந்தது. நேற்று இருவர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை, 682 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 41 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.கோவையில், இதுவரை, 54 ஆயிரத்து, 460 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 402 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE