திண்டுக்கல்:ஓடும் லாரியில் பெயின்ட் டப்பாக்கள் திருடிய நால்வரை, போலீசார் கைது செய்தனர்.
மதுரை, வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவர், கோவையில் இருந்து, மதுரைக்கு லாரியில் பெயின்ட் டப்பாக்கள் லோடு ஏற்றி, இரவு வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, ஓடும் லாரியின் பின்புறம் ஏறிய மர்ம நபர், பெயின்ட் டப்பாக்களை திருடி, பின்தொடர்ந்த, 'மாருதி ஆம்னி' வேனுக்கு மாற்றினார்.
கண்ணாடி வழியாக பார்த்த சங்கர் கணேஷ், லாரியை நிறுத்தினார். திருட்டு கும்பல், கத்தியை காட்டி மிரட்டியதால், ஓடி மறைந்து கொண்டார். அவரச போலீஸ் 100ஐ தொடர்பு கொண்டு உதவி கோரினார். விளாம்பட்டி ரோந்து போலீசார் அங்கு வந்தனர்.
போலீசாரை கண்டவுடன், பெயின்ட் டப்பா திருட்டில், 'பிசி'யாக இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டியபோது, கீழே விழுந்தவரை கைது செய்தனர். அவரது தகவலின்படி, செம்பட்டி வழியாக தப்ப முயன்ற மற்ற மூவரையும் கைது செய்தனர். விசாரணையில், மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த, 21 - 25 வயதுள்ள நால்வர் என்பது தெரிந்தது. வேன், பெயின்ட் டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE