மூணாறு:கேரளா மூணாறில் இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட உறைபனியால் நுாற்றுக்கணக்கான ஏக்கர் தேயிலைச் செடிகள் கருகின.
2020 டிசம்பர் மற்றும் ஜனவரியில் இயல்புக்கு மாறாக மழை பெய்ததால் ஓரிரு நாட்களே உறைபனி ஏற்பட்டது. அதனால் தாக்கம் குறைந்து தேயிலைச் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.ஆனால் இரு வாரங்களுக்கு முன் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் மைனஸ் -4 டிகிரி செல்சியஸ் வரை குறைந்ததால் உறைபனி அதிகமாக இருந்தது.
அதனால் நுாற்றுக்கணக்கான ஏக்கர் தேயிலைச் செடிகள் கருகி தீவைத்தது போல காணப்படுகிறது. அவை துளிர்விட குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் நீடிக்கும் என்பதால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE