ராமேஸ்வரம்:பாம்பன் புதிய ரயில் பாலத்தின் கட்டுமானப்பணி விரைவாக நடப்பதால் , 2021 டிச.,க்குள் 100 சதவீதம் முடிய வாய்ப்பு உள்ளது , என தென்னக ரயில்வே பாலங்கள் தலைமை பொறியாளர் சுமித் சிங்கால் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.250 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானம் தீவிரமாக நடக்கிறது. இப்பணியை நேற்று தென்னக ரயில்வே பாலங்கள் தலைமை பொறியாளர் சுமித் சிங்கால் ஆய்வு செய்து, தற்போதைய ரயில் பாலத்தின் உறுதி திறன் குறித்து பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தலைமை பொறியாளர் சுமித் சிங்கால் கூறியதாவது :புதிய பாலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து ரயில்வே அமைச்சகம் முடிவு செய்யும். தற்போதைய ரயில் பாலம் மற்றும் துாக்கு பாலம் உறுதியாக உள்ளது. இதனை சென்னை ஐ.ஐ.டி., பொறியாளர்கள் மற்றும் பாம்பன் ரயில்வே பொறியாளர்கள் கண்காணித்து வருகின்றனர், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE