நாகர்கோவில்:''தமிழகத்தில், தேர்தலுக்கு பின், ஆட்சியில் பங்கு பற்றி மேலிடம் முடிவு செய்யும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் கூறினார்
.நாகர்கோவிலில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், 234 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு பின், ஆட்சியில் பங்கு பற்றி மேலிடம் முடிவு செய்யும்.கன்னியாகுமரியில், பா.ஜ., வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று.
பெட்ரோல், டீசல், காஸ் விலை, 2013க்கு பின் தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கிறது. வரிகளை குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் கவர்னர் கூறியுள்ளதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் வரியை குறைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை, கர்நாடக அரசு எதிர்ப்பது, அந்த மாநில மக்களுக்காக.
நாம் நம் மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும். தமிழக நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழகத்தில் காங்கிரஸ் ஒன்று, இரண்டு இடத்தில் இருக்கிறது. அதையும் ஒழிக்க ராகுல் வருகிறார். அவர் செல்லும் இடம் எல்லாம், காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE