சிவகங்கை:புதிய பென்ஷன் திட்டம் ரத்து, மத்திய அரசுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட, 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும், 28ல், 'ஜாக்டோ - ஜியோ' மாநில மாநாடு நடக்கிறது.
சென்னை, மாதவரம் ராமலட்சுமி பாரடைசில் நடக்கும் மாநில மாநாட்டிற்கு, மாநில ஒருங்கிணைப்பாளர்கள், 20 பேர் தலைமை வகிக்கின்றனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசுகிறார். தி.மு.க., கூட்டணி கட்சி களான காங்., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கூறுகையில், ''இம்மாநாட்டில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூடுவர் என, எதிர்பார்க்கிறோம். மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாடு குறித்த மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், நாளை சென்னையில் நடக்கிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE