விழுப்புரம்:பா.ஜ., மாவட்ட தலைவர் மீது, பெண் ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி காயத்ரி, 45; இவர் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு:
என் உறவினரின் நண்பரான பா.ஜ., மாவட்ட தலைவர் கலிவரதன், எனக்கு கட்சியில் மாவட்ட பொறுப்பு வாங்கி தருவதாக கூறினார். என் கணவர் விரும்பாததால், மறுத்து விட்டேன். ஆனால், அவராகவே என்னை கள்ளக்குறிச்சி மகளிரணி பொதுச் செயலர் என போஸ்டர் அடித்து, எங்கள் பகுதியில் ஒட்டினார்.என் கணவர் கண்டித்ததை அறிந்த கலிவரதன், அவர் கூறுவது போல் நடக்கா விட்டால், என் குடும்பத்தை அழித்து விடுவதாக மிரட்டினார்.
இதனால், என்னை கட்சி பணிக்கு, அவர் அழைத்துச் செல்வதை, எங்களால் தடுக்க முடிய வில்லை.தீபாவளி பண்டு பட்டாசு மற்றும் நகையை குறைந்த விலையில் வாங்கித் தருவதாக கூறி, என்னிடம் கட்டாயப்படுத்தி வாங்கிய, 5 லட்சம் ரூபாயை இதுவரை தரவில்லை.
மகளிரணி தலைவி பொறுப்பு வாங்கி தருவதாகவும், கவுன்சிலர் சீட் வாங்கி தருவதாகவும் கூறி, 5 லட்சம் ரூபாயை, கட்டாயப்படுத்தி வாங்கினார். என் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.அதை மொபைல் போனில் படம் எடுத்து, என்னை மிரட்டி வருகிறார்.
மோசடி செய்த கலிவரதன் மீது நடவடிக்கை எடுத்து, என்னிடம் அபகரித்த, 10 லட்சம் ரூபாயை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE