ஊட்டி:கொரோனா உறுதியானதால், ஊட்டியில் இரண்டு பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு உதவி பெறும் இரண்டு தனியார் பள்ளிகளில் பணிபுரியும், தம்பதி ஆசிரியர்களுக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டது.சம்பந்தப்பட்ட பள்ளிகளில் அனைத்து மாணவ, மாணவியர் ஆசிரியர்களுக்கும், சுகாதாரத் துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதையடுத்து, அந்த இரண்டு பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. மாணவர்களின் கொரோனா முடிவு வந்த பின், பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE