கோவை:விபத்தில் கணவர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் பவானி காளிங்கராயன் பாளையத்தைச் சேர்ந்தவர் சேகரன் 50; சலவைத் தொழிலாளி. இவரது மனைவி நாகரத்தினம் 46. இவர்களுக்கு குழந்தை இல்லை.சேகரன் நேற்று காலை காளிங்கராயன் பாளையத்தில் இருந்து பண்ணாரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். காலை 8:00 மணிக்கு சிக்கரசம்பாளையத்தில் எதிரே வந்த கார் பைக் மீது மோதியது.
இதில் சேகரன் படுகாயமடைந்தார்.கோவை குரும்பபாளையம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று மதியம் இறந்தார். தகவல் அறிந்து வந்த அவரது மனைவி நாகரத்தினம் அந்த மருத்துவமனையின் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அதே இடத்தில் இறந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE