மதுரை:அரசு பட்டய மருத்துவ ஆய்வக தொழில்நுட்பனர் (லேப் டெக்னீசியன்) சங்க மாநில பொதுச்செயலாளர் ஷாஜகான். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரிகளில் ஆய்வக தொழில்நுட்பனர் கிரேடு-2ல் பலர் கிரேடு-1 பதவி உயர்வின்றி பணிபுரிகின்றனர். பலர் 30 ஆண்டுகள் பணி முடிந்து பதவி உயர்வின்றி ஓய்வு பெறுகின்றனர். கலந்தாய்வு நடத்தாமல் 112 பேருக்கு பதவி உயர்வு பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குனர் வெளியிட்டார்.
வெளிப்படை தன்மை இல்லை. பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. பதவி உயர்வு உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்: பதவி உயர்வு உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து மருத்துவக்கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு மார்ச் 23க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE