ஊட்டி:கோடநாடு வழக்கில் மூன்று பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், முதல் கட்டமாக எஸ்டேட்டில் பணிபுரிந்த, மூன்று பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு முடிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் உட்பட, ஏழு பேர் ஆஜராகினர். அப்போது, கோடநாடு எஸ்டேட்டில், வி.ஏ.ஓ.,வாக இருந்த மோகன்குமார், கூடலுார் வி.ஏ.ஓ., உதவியாளர் நடராஜன், கோத்தகிரியில் துணி வியாபாரம் செய்து வரும் ஜெயசீலன் ஆகிய மூவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.வழக்கை நீதிபதி அருணாச்சலம், பிப்., 26க்கு ஒத்தி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE