காரைக்குடி : காரைக்குடி ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் கோதுமையில் உமி, களிமண், துாசி கலந்து தரமற்று இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காரைக்குடி தாலுகாவில் 140 ரேஷன் கடைகளும், காரைக்குடி நகரில் 40 ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன.பொது வினியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரருக்கு ரேஷன் கடைகளில் சர்க்கரை, அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில்,உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இங்கு வழங்கப்படும் கோதுமையில் துாசி, உமி மற்றும் களிமண் துகள் கலந்து பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது. மக்கள் கோதுமையை வாங்கிச் சென்று கால்நடைகளுக்கும், குப்பையில் கொட்டும் சூழல் நிலவுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE