ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையால் தேசிய திறனாய்வு கட்டுரை,பேச்சு போட்டி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனி பிரிவாக கல்வி மாவட்ட அளவில் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி 11 ம் வகுப்பு ஞானசேகரன் 15, பேச்சு போட்டியிலும், ஒன்பதாம் வகுப்பு பாஸித் 13, பேச்சு போட்டியிலும் வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர். தலைமை ஆசிரியர் இந்திராகாந்தி, முன்னாள்மாணவர்கள் சங்க தலைவர் சசிக்குமார், நிர்வாகிகள் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE