சிவகங்கை : மானாமதுரை அருகேயுள்ள பனிக்கனேந்தல் கண்மாய் நீர் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி இளைஞர்கள் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:மானாமதுரை வைகை ஆற்றின் கரையில் பனிக்கனேந்தல் கிராமம் உள்ளது. இங்கு நான்கு கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களுக்கு நீர்வரத்துக்கால்வாய்களில் ஆக்கிரமிப்பு உள்ளது. சிலருக்கு அரசு அசைன்மென்ட் பட்டா வழங்கியுள்ளது.இதனை ரத்து செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாய் நீர் வரத்தினை உறுதி செய்ய வேண்டும், என அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.கலெக்டர் மதுசூதன்ரெட்டி விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE