கமுதி : கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை மற்றும் மத்திய அரசின் அலிம்கோ, இன்ஜினியரிங் இந்தியா லிமிடெட் நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான கருவிகள் வழங்கும் முகாம் நடந்தது.ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமை வகித்தார். பி.டி.ஓ.,தங்கபாண்டியன், முடநீக்கு வல்லுநர் ஜெயசங்கர் முன்னிலை வகித்தனர்.முகாமில் வீல் சேர், செயற்கை கால், கை, காதுஒலி கருவி, ஊன்றுகோல்கள், முடநீக்கும் கருவி, தொழுநோயாளிக்கு அலைபேசி உட்பட 60க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE