சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகையை 3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும்.தனியார் நிறுவனங்களில் 5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு அரசு அலுவலகங்களில் குடியேறும்போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மாவட்டத்தலைவர் இன்னாசிராஜா தலைமை வகித்தார். செயலாளர் முத்துராமலிங்கபூபதி, துணை செயலாளர் திருநாவுக்கரசு, துணைத்தலைவர் மலர்விழி, பொருளாளர் செந்தில், அப்துல்கலாம் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத்தலைவர் கண்ணன், இணைந்த கரங்கள்அமைப்பின் மாநிலத்தலைவர் நாகூர்மீரா, தவழும் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில துணைத்தலைவர் புஷ்பா, மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE