ராமநாதபுரம் : ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கான நேர்காணல் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பத்திரப்பதிவு முத்திரைத் தாள்கள் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. மாவட்ட அளவில் 40 முத்திரைத்தாள் விற்பனையாளர்களில் 19 இடங்கள்காலியாக உள்ளது. இதில் 17பேரை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்காக 30 பேர் விண்ணப்பித்துஉள்ளனர். நேற்று ராமநாதபுரம் பத்திரபதிவு அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது.
மாவட்டப் பதிவாளர் ரத்தினவேல் தலைமையிலான குழுவினர் சான்றிதழ்கள், கல்வி தகுதிகளை சரிபார்த்தனர். நேர்காணலில் புரோக்கர்கள் தலையீடு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டப் பதிவாளர் ரத்தினவேல் கூறுகையில், 'பத்தாம் வகுப்பு கல்வி தகுதியாக கொண்டு 30 பேருக்கு 15பேர் வீதம் இரண்டு நாட்கள் நேர்காணல் நடக்கிறது.
சான்றிதழ்களை சரிபார்த்து நேர்காணல் விதிமுறைப்படி வெளிப்படையாக நடக்கிறது. மோசடி நடக்க வாய்ப்பில்லை, இன்றும் நேர்காணல் நடக்கிறது.விண்ணப்பங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தான் நியமன ஆணை வரும்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE