ராமநாதபுரம் : டூவீலரில் மாடு மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மின்வாரிய ஒப்பந்த பணியாளர் பலியானார்.
ராமநாதபுரம் அருகே வளையர்வாடி எண்ணெய்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி 48. மண்டபம் பகுதியில் மின்வாரிய ஒப்பந்த பணியாளராக உள்ளார்.நேற்று முன்தினம் இரவு அவசரப் பணியாக டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றுவிட்டு மீண்டும் மண்டபம் திரும்பினார்.மண்டபம் ஆரம்பசுகாதார நிலையம் அருகே திடீரென குறுக்கிட்ட மாடு டூவீலரில் மோதியது.கீழே விழுந்த வெள்ளைச்சாமி தலையில் காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார்.மண்டபம் போலீசார் விசாரிக்கின்றனர். பலியான வெள்ளைச்சாமிக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE