ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சண்முநாததுரை தலைமை வகித்தார். செயலாளர் சேகர், ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்து முருகன் முன்னிலை வகித்தனர்.இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இத்துடன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் 7 நாட்களாக போராடி வருகின்றனர்.
சென்னையில் போராடிய அரசு ஊழியர்களை தாக்கியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தமிழ்நாடு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட செயலாளர் குருவேல் உட்பட பலர் பங்கேற்றனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அப்துல் நஜ்முதின் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE